இந்த விடுமுறையில் வழக்கம் போல் சித்தி வீட்டுக்கு போன போதும் அதே மாதிரி தான் சித்தி மகள் தங்கை சுபா நடந்து கொண்டாள். எனக்கு அது புரியாத புதிராகத்தான் இருந்தது. இதெல்லாம் இப்போது அவள் டீன் ஏஜ் வயதில் கல்லூரிக்குள் நுழைந்த பிறகு தான் இந்த அதிரடி அதிசய மாற்றத்தை அவளிடம் காண்கிறேன். இதற்கு முன்பு அவளே போன் போட்டு அண்ணா எப்போ வெகேஷனுக்கு வர்றே. சீக்கிரம் பெரியம்மாவோட கிளம்பி வா. எனக்கு லீவ் விட்டாச்சு. பெங்களூர் கிளைமேட் சூப்பரா இருக்கு. நல்ல ஜாலியா ஊர் சுத்தலாம். என்னோட ஃப்ரெண்ட்சை எல்லாம் உனக்கு இன்ட்ரோ பண்ணி விடுறேன். லெட் அஸ் என்ஜாய் அவர் வெகேஷன் அண்ணா என்று போனில் வாய் நிறைய பேசி விடுமுறைக்கு வர வேண்டி விரும்பி அழைப்பாள்.
சுபாவோட இந்த மாற்றத்தை நான் பல விதமாக யோசித்தேன். இதற்கு முன்பு இருவரும் ஓடி ஆடி சீண்டி விளையாடினாலும் இப்போது ஹார்மோன் சுரக்கும் பருவ வயதில் அதுவே ஒரு கூச்சத்தையும்,வெட்கத்தையும் உருவாக்கி இருக்கலாம். அதனால் தான் தங்கை சுபா என்னைவிட்டு விலகி போகிறாள். முன்பு போல் சிரித்து பேச மறுக்கிறாள். அவள் டீன் ஏஜ் பருவம் தான் காரணம் என்று நான் காரணம் கற்பித்து கொண்டு இருந்தேன். அல்லது அவளோட கல்லூரியில் பசங்களோடு ஏதாவது ஒரு பேட் அனுபவம் ஏற்பட்டு அதனால் மூட் அவுட்டில் இருக்கிறாளா. நான் அன்பு அண்ணாவாக இருந்தாலும் என்னையும் அப்படியான ஒரு பையன் தான் என்று நினைத்துக் கொண்டு ஒதுங்குகிறாளா என்று பலவாறு யோசித்து குழம்ப ஆரம்பித்தேன்.
இது பற்றி அம்மாவிடம் அல்லது சித்தியிடம் பேச தயங்கிய போது,ஒரு நாள் சித்தி வீட்டில் நான் ஆர்வமாக டிவியில் கிரிக்கெட் பார்த்து கொண்டு இருந்த போது சித்தியும்,அம்மாவும் சமையல் செய்த கொண்டே சீரியஸாக பேசிக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் டாப்பிக்கை கூர்ந்து கவனித்த போத அது சுபாவைப் பற்றியது என்பதை தெரிந்து கொண்டு சுபாவை தேடினேன். அவள் பாத்ரூமில் குளித்துக் கொண்டு இருப்பதை கவனித்தேன். பிறகு நான் டிவி வால்யூமை குறைத்து கொண்டு கிச்சனில் அம்மாவும்,சித்தியும் பேசுவதை ஆவலோடு கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன்.
அப்போது சித்தி சுபாவை பற்றி சொன்னத் தகவல் தான் என்னையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. அதாவது சுபா வயதுக்கு வந்த பிறகு அவள் உடம்பில் மற்ற பெண்களுக்குரிய பருவ மாற்றங்கள் நிகழ்ந்தாலும் கூடுதலாக அவள் உடம்பெங்கும் கை,கால் தொடை வரை தேவையில்லாமல் அதிகமாக முடி முளைத்து அவள் அவஸ்தை படுவதாகவும். பல தோல் நோய் மருத்துவர்களிடம் காட்டியும் பெரிய முன்னேற்றம் இல்லை என்று சித்தி அழுது கொண்டே அம்மாவிடம் சொன்னதை கேட்டும் நானும் மனம் வருந்தினேன்.